முதுநிலை பயிற்சிகள் (Advanced Art Of Living Programs in tamil)

குணமாக்கும் பயிற்சி /ஆசீர்வதிக்கும் பயிற்சி /பிளஸ்சிங் பயிற்சி

நீ எதையும் விரும்பாத நிலையில் இருக்கும்போது ஆசீர்வாதங்கள் பெருகி வழிய ஆரம்பிக்கும்.-ஸ்ரீஸ்ரீ

ஆசீர்வதிக்கும் பயிற்சி ஒரு நுணுக்கமான சக்தி வாய்ந்தது . ஒப்பற்ற தனித்துவமான செய்முறைகளையும் தியானத்தையும் உள்ளடக்கிய இது ஆழ்ந்த நன்றியுணர்வு நிலை மற்றும் பரிபூரண நிலைக்கு அழைத்துச் செல்லுமாறு வடிவமைக்கபட்டுள்ளது. இதைப் பயின்றவர்கள் கூற்றுப்படி தாங்கள் எடுத்துக்கொண்ட வேறு எந்த பயிற்சியை விடவும் இதில் அளப்பரிய கருணையை தங்களுக்குள்ளும் உணர்ந்துள்ளனர். தங்களிடமிருந்தும் கருணை சுரப்பதையும் உணர்ந்துள்ளனர்.

பயிற்சிக்கான தகுதிகள் :

  • 2 முறை முதுநிலை தியான பயிற்சி முடித்திருக்கவேண்டும்.

 

பதிவு செய்ய (DSN)

டி எஸ் என் ஒரு கடுமையான மற்றும் உரு மாற்றம் நிகழ்த்தும் பயிற்சி.இது பயிற்சி பெறுபவரின் தனிப்பட்ட தடைகளை தகர்த்தெரிந்து உள்ளம் உறுதியையும் சக்தியையும் அடைய உறுதுணை புரிகிறது.

நாம் ஒவ்வொருவரும் நமக்கும், நம் குடும்பத்திற்கும், நம் சமூகத்திற்கும் நம் உலகிற்கும் நல்லது செய்திட பேரவா கொண்டுள்ளோம். ஆனால், நம் தனிப்பட்ட தடைகளும், பழைய வழக்கங்களும், உணர்வுக் காயங்களும்,பயங்களும்,நம்மை வாழ்வில் முழுதும் பங்கேற்க விடாது இழுத்து பிடிக்கின்றன.

டி எஸ் என் என்பது யோகா ,சக்திமிகு செய்முறைகள்,மற்றும் ஆழ்ந்த ஆன்மீக ஞானம் ஆகியவற்றின் மூலம் தடைகளை தகர்த்து நம்மை உணர்ந்து முழுமையாக நமக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வழிவகுக்கிறது.

பயிற்சியில் சேர தகுதிகள் :

  • வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி (பாகம்-1)அல்லது யெஸ்!+ பயிற்சி முடித்திருக்கவேண்டும்.

 

குரு பூஜா பயிற்சி (பாகம் 1&2)

குருபூஜா என்பது தன்னையுணர்ந்த ஆன்ம ஞானத்தின் பாதுகாவலர்களான ஆன்மீக குருமார்களின் பரம்பரைக்கு நன்றியை மரியாதை நிமித்தம் செலுத்தும் பாரம்பரிய முறை. ஸ்ரீஸ்ரீரவிசங்கரின்  சகோதரி பானுமதி அவர்களின் அன்பான வழிகாட்டுதலின் கீழ் குருபூஜா மந்திர ஜபமும் குருபூஜா செய்யும் முறையும் சொல்லித்தரப்படும். குருபூஜா மந்திர ஜபம் செய்பவர் மனதை குருபரம்பரையுடன் இனணக்கிறது. குருபூஜா கற்றவர் பெரும்பாலானவர் பயிற்சியின் போதும் குருபூஜா செய்யும் போதும் இறை சக்தியை உணர்ந்த உயர்ந்த அனுபவப் பட்டுள்ளனர்.

இந்த பயிற்சி பண்டைய அழகிய ஞானம் ,கதைகள்,பெரும் குருக்களின் இருப்புணரும் ஆழ்ந்த உணர்வும் உள்ளடக்கியது .

குருபூஜா பயிற்சி இரண்டு பாகங்கள் கொண்டது.

பாகம்-1: இதில் பூஜா மந்திரங்கள் ஜெபிக்கும் முறை கற்பிக்கப்படும்.மேலும் மறைபொருளான வேதஞானம் மற்றும் பாரம்பரியம் பற்றி கூறப்படும்.

பாகம்-2:இதில் குருபூஜா மந்திர ஜபம் செய்யும்போது ஆன்மீக குருக்களின் பரம்பரை இருப்பை உணரும் தகுதி அளிக்கிறது.

தகுதிகள்:

  • வாழும் கலை ஆசிரியர் அல்லது
  • ஆசிரியர் பயிற்சி (பாகம்-1)+ 2 முதுநிலை தியானப்பயிற்சி +தியானக்கலை (சஹஜ் சமாதி தியானம்) அல்லது
  • 4 முறை முதுநிலை தியானப்பயிற்சி +சஹஜ் சமாதி தியானம் பயிற்சி முடித்திருக்க வேண்டும் .

எட்டர்னிட்டி பயிற்சி

ஆன்மா முடிவற்றது . நம் இப்போதைய உடலில் இருப்பது நீண்ட காலத்திற்கு முன்பே இங்கிருந்தது. நம் உடல் மண்ணான பின்னும் அது தொடரும்.

எட்டர்னிட்டி பயிற்சி என்பது நம் இப்போதைய வாழ்வுமுறைக்கு மூல காரணமான முன் ஜென்ம நிகழ்வுகளை மீண்டும் நோக்கி சரிசெய்யும் முறையாகும். இந்த வகைகள் மனம் அல்லது உடல் சார்ந்ததாக இருக்கலாம்.அவற்றை மாற்றவும் புரிந்துகொள்ளவும் இதன்மூலம் இயலும். நம் வாழ்வின் முன்னேற்றத்தை தடுக்கும் பழைய பதிவுகளை அகற்றுவதற்கு உதவி வாழ்வை பூரணமும் மகிழ்ச்சியும் உடையதாக்குகிறது.

இந்த எட்டர்னிட்டி பயிற்சி ஆழ்ந்த தியான நிலையில் 2-3 மணி நேரத்தில் ஒரு முறை செய்யக்கூடியது ஆகும்.

தகுதிகள் :

  • மூன்றுமுறை முதுநிலை தியானப்பயிற்சி செய்திருக்கவேண்டும்.(ஒன்று குருஜியுடன் செய்திருக்கவேண்டும்)